Header Ads



டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..?


இந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தினை ஹாங்காங் வீரர் கூறியுள்ளார்.

துபாய் மற்றும் ஐக்கிய அமீரகத்தில் ஆசிய கிண்ணத்திற்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.

போட்டியின் இடையே ரசிகர்களின் ஆரவாரமான கரகோஷத்தில் டோனி களமிறங்கினர். 2 பந்துகளை சந்தித்து ஒரு ரன் கூட எடுக்காத டோனி துரதிஷ்டவசமாக 3-வது பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.

இதனை சற்றும் எதிர்பார்த்திராத ரசிகர்கள் , அதிர்ச்சியில் உறைந்து போயினர். அதேசமயம் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் எதிர் அணியினர் துள்ளிக்குதிக்க, பந்து வீச்சாளர் எசன் கான் உடனே தரையில் விழுந்து வணங்கினார். இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாக பரவியது.

இந்த நிலையில் டோனியின் விக்கெட் குறித்து பேசியுள்ள அவர், நான் டோனியின் விக்கெட்டை வீழ்த்தியதும் ஏன் கீழே விழுந்து கடவுளை வணங்கினாய் என அனைவரும் கேட்கின்றனர். டோனியின் விக்கெட் 5 விக்கெட்டுகளுக்கு சமம். டோனியின் விக்கெட்டுடன் சேர்த்து இந்தியாவிற்கு எதிராக நான் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தேன் என பெருமையாக கூறியுள்ளார்.

மேலும், அந்த சமயத்தில் விக்கெட் கீப்பரை பார்த்து தான், நான் நடுவரிடம் முறையிட்டேன். ஆனால் டோனி உடனடியாக அங்கிருந்து நடக்க ஆரம்பித்துவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து, ஏதேனும் சத்தம் உங்களுக்கு கேட்டதா என நடுவர் என்னிடம் கூறினார். நான் எதுவும் கேட்கவில்லை என கூறினேன்.

பின்னர் நான் பேட்டிங் செய்ய வந்த பொழுது, போட்டி முடிந்த பிறகு உங்களை சந்திப்பேன். என் வாழ்க்கையில் மீண்டும் இந்த தருணம் எப்பொழுது கிடைக்கும் என எனக்கு தெரியாது என்று தான் கூறியதாக தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.