Header Ads



அஷ்ரபை சந்தைப்படுத்தி நடக்கும், பித்தலாட்ட நாடகம்

-Alhaj Mha Samad, அமைச்சர் அஷ்ரப்பின் முன்னாள் செயலாளர்)

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் பற்றி யார்யாரோ எல்லாம் கதை எழுதுகிறார்கள்.

சிலர் அவரின் போட்டோவை கண்டுவிட்டு அதைகொப்பி பண்ணி கணனிமூலம் ஜில்மால் செய்து கதை அளக்கிறார்கள்.

அவரை பயன்படுத்தி மில்லியன் மில்லியனாக உழைத்தவர்கள், அவரை சந்தைபடுத்தி நாடகம் நடிக்கிறார்கள்.

இந்தக் கள்ளர்கள் எல்லோரையும் நான் நன்கு அறிவேன்.

அவர் உயிருடன் இருந்த காலத்தில் எதை களவாடமுடியுமோ அல்லது சுரண்ட முடியுமோ, அதை எல்லாம் சுரண்டியவர்கள் இப்பொழுது கலிபாக்களாக மாறி தொழுது காட்டுகிறார்கள்.

மற்றவர்களின் சேவைகளை மறைத்து, தாம் தாம் தோழர்கள் என்றுகாட்டுகிரார்கள் ஹதீது சேகரித்து இமாம்களாகிறார்கள்.

சில கவிஞர்கள் ஆதாரங்கள் போட்டு நிருபிக்கிறார்கள், புலவர்கள் காவியம் எழுதுவதும் கற்பனை பண்ணுவதும் இரசிக்கலாம்.

ஆனால் பொய்களை எழுதும் கூலிபடைகளை கண்டு, உண்மையாக அவரை நேசித்த பலர் இன்று கண்ணீர் சிந்துவதை தவிரவேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

மர்ஹூம் அஷ்ரபின் இரத்த உறவுகளான அமான் அஷரப் அவரது தங்கை பிறோசா ஹுசைன் போன்றவர்கள் உணர்வுகள் மதிக்கப்படவேண்டியவை.

மற்றவர்கள் ஏதோ நன்மை பெற நடிக்கிறார்கள் என்றுதான் நான் கூறுவேன்

3 comments:

  1. Eppothum illatha akkarai ippadi silarukku ippadi thideerena warak karanam enna?

    ReplyDelete
  2. மர்ஹூம் அஷ்ரப்பின் படங்களும் சங்கதிகளும் சற்று அதிகமாகவே ஊடகங்களில் தலைகாட்டுறதை பார்த்தால் கூடிய விரைவில் நம் அரசியல் வியாதிகள் மக்களை சந்தித்து வாக்கு பிச்சை கேட்க ஆயத்தமாகின்றார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது

    ReplyDelete

Powered by Blogger.