Header Ads



கொழும்பை பாதுகாக்கும் திட்டம், கொமாண்டோ படைக்கு இராணுவத் தளபதி உத்தரவு


நாட்டின் முக்கியமான இடங்களின் பாதுகாப்பு தொடர்பான அவசர நிலையை எதிர்கொள்வதற்கான உடனடித் திட்டங்களுடன் தயாராக இருக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ பிரிகேட்டுக்கு இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார் என்று ‘றிவிர’ சிங்கள வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றம், அதிபரின் இல்லம், அலரி மாளிகை, மத்திய வங்கி போன்ற நாட்டின் முக்கியமான கேந்திர நிலைகளின் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களைத் தயாரிக்குமாறே சிறிலங்கா இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.

‘நீர்க்காகம் கூட்டுப் பயிற்சி’யின் ஒரு கட்டமாக, கொழும்பில் உள்ள தாமரைத் தடாகம் அரங்கில் பணயக் கைதிகளை மீட்கும் கொமாண்டோ தாக்குதல் ஒத்திகை ஒன்று கடந்த 20ஆம் நாள் நடத்தப்பட்டது.

இதன்போது, கொமாண்டோக்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின் போதே, சிறிலங்கா இராணுவத் தளபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

No comments

Powered by Blogger.