Header Ads



நீங்கள் அழுக்கானவர்கள், எனக்கூறி பள்ளிவாசல் அருகே முஸ்லிம்கள் மீது தாக்குதல்

லண்டனில் உள்ள மசூதியில் முஸ்லீம் மக்கள், மது அருந்திய மர்ம நபர்கள் சிலர் கார் ஏற்றி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வடக்கு லண்டன் பகுதியில் உள்ள மசூதிக்கு வெளியே இன்று அதிகாலை 12.35 மணிக்கு(உள்ளூர் நேரப்படி) பயங்கரமான தாக்குதல் நடைபெற்றுள்ளது.

மசூதியில் இருந்து வெளியில் வந்த சில முஸ்லீம் ஆட்கள் மீது, அதிவேகத்தில் வந்த கார் மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் 50 வயதுள்ள ஒரு நபர் படுகாயமடைந்ததோடு, இரண்டு இளைஞர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் உடனடியாக விபத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து பொலிஸார் தரப்பு கூறுகையில், இது ஒரு மதவெறி தாக்குதல் மட்டுமே. இதில் பயங்கரவாத அமைப்பிற்கு தொடர்பில்லை என நினைக்கிறோம். காரில் வந்தவர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான சில வார்த்தைகளை பயன்படுத்தியவாறு தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.


இந்த விபத்தின் போது உள்ளிருந்த 3 ஆண்களும், ஒரு பெண்ணும் 20 வயது மதிக்கத்தக்கவர்கள். அவர்கள் அனைவரும் மது மற்றும் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது என தெரியவந்துள்ளது. விபத்து குறித்த விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.