Header Ads



வாகன நெரிசலினால் வருடாந்தம் 360 பில்லியன் ரூபா நஷ்டம்


வீதிகளில் ஏற்படும் வாகன நெரிசல் காராணமாகவே பாரிய நஷ்டம் ஏற்படுவதாக நிபுணர் ஓருவர் தெரிவித்துள்ளார்.இத்தகைய நெரிசலால் ஏற்படும் இழப்பு வருடாந்தம் 360 பில்லியன் ரூபா வரை உயர்வதாக போக்குவரத்து பட்டய நிறுவகத்தின் தலைவி கயனி டீ அல்விஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழில்துறை சார்ந்தோர் சங்கத்தின் 31 ஆவது வருடாந்த மாநாட்டில்  அவர் தனது உரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

குறித்த இம் மாநாடு நேற்று கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.