Header Ads



ஞானசாரர் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல், 28 ஆம் திகதி விசாரணை

பொதுபல ​சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினை நீக்கி தன்னை விடுதலை செய்யுமாறு, ஞானசார தேரர் இவ்வாறு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஞானசாரரின் மனு, இம்மாதம் 28 ஆம் திகதி உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் ஞானசார தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றிலும் மனுவொன்றை தாக்கல் செய்திருந்த போதிலும், அதனை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், பொதுபல ​சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, 6 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள​மை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.