Header Ads



அம்பாறை பள்ளிவாசல் சேதம் 27 மில்லியன், 1 மில்லியனை வழங்கி ஏமாற்றியது நல்லாட்சி


கடந்த பெப்­ர­வரி மாதம் அம்­பா­றையில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் முழு­மை­யாக சேதங்­க­ளுக்­குள்­ளான அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்கு ஏற்­பட்ட நஷ்டம் 27 மில்­லியன் ரூபா என மதிப்­பீடு செய்­யப்­பட்ட போதிலும் ஒரு மில்­லியன் ரூபாவே நஷ்­ட­ஈ­டாக வழங்­கப்­ப­டு­வ­தற்குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்கு ஏற்­பட்ட நஷ்டம் 27 மில்­லியன் ரூபா என மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்ள போதிலும் அத்­தொகை நஷ்­ட­ஈ­டாக வழங்­கு­வது நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. நிதி­ய­மைச்சு ஒரு மில்­லியன் ரூபாவை நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளித்­துள்­ளது.

அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வா­சலின் நஷ்­ட­ஈடு மதிப்­பீட்டுத் தொகை­யான 27 மில்­லியன் ரூபாவை தாம­தி­யாது வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­யு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த ஜூன் மாதம் முதலாம் வாரம் புனர்­வாழ்வு அதி­கார சபைக்கு உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

கடந்த ஜூன் மாதம் 6 ஆம் திகதி பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தியில் பிர­தமர் தலை­மையில் கண்டி வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டுகள் வழங்கும் நட­வ­டிக்­கை­களின் முன்­னேற்றம் தொடர்­பாக ஆராயும் கூட்­ட­மொன்று நடை­பெற்­றது.

இக்­கூட்­டத்­தின்­போது அம்­பா­றையில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வாசல் மற்றும் தனியார் சொத்­து­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டுகள் தாம­த­மா­கின்­றமை தொடர்­பில அமைச்சர் ரவூப் ஹக்கீம் கேள்­வி­யெ­ழுப்­பினர்.

இச்­சந்­தர்ப்­பத்­திலே அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்­கான நஷ்­ட­ஈடு 27 மில்­லியன் ரூபாவை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்­றினைத் தயா­ரித்து அங்­கீ­கா­ரத்தை பெற்­றுக்­கொள்­ளு­மாறு புனர்­வாழ்வு அதி­கார சபைக்குப் பிர­தமர் பணிப்­புரை விடுத்தார். கூட்­டத்தில் புனர்­வாழ்வு அதி­கார சபையின் அதி­கா­ரி­களும் கலந்து கொண்­டி­ருந்­தனர். என்­றாலும் அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்­றுக்­கொள்­வதில் தாம­தங்கள் நில­வு­வ­தா­கவும் சில அமைச்­சர்கள் தாம­தப்­ப­டுத்­து­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதே­வேளை, பள்­ளி­வா­ச­லுக்கு ஒரு மில்­லியன் ரூபாவே நஷ்­ட­ஈ­டாக வழங்­கப்­பட வேண்டும் என நிதி­ய­மைச்சு தெரி­வித்­துள்­ளது.

1987 ஆம் ஆண்டின் சுற்­று­நி­ரு­பத்­தின்­படி வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­துக்­களின் நஷ்ட மதிப்­பீட்டில் 20 வீதமே நஷ்­ட­ஈ­டாக வழங்க முடியும். அத்­தோடு பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டாக ஒரு மில்­லியன் ரூபா­வுக்கு உட்­பட்ட தொகையே வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அம்பாறையில் இடம்பெற்ற வன்செயல்களினால் அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் உட்பட 13 சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டன. இவற்றில் பள்ளிவாசலுக்கு ஏற்பட்ட நஷ்டம் 27 மில்லியன் ரூபாவெனவும் ஏனைய சொத்துகளுக்கு ஏற்பட்ட நஷ்டம் 3.5 மில்லியன் ரூபாவெனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ARA.Fareel

No comments

Powered by Blogger.