Header Ads



தனிமையில் இருந்த 14 வயது சிறுவனை, பாலியல் வல்லுறவுசெய்த பொலிஸ்காரன் கைது

சிறுவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை எதிர்வரும் 13 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தளை நீதவான் கே.சிறிஹேரத் இன்று -26- உத்தரவிட்டுள்ளார்.

மாத்தளை ஒவிலிகந்த பிரதேசத்தில் 14 வயதான சிறுவனை சந்தேக நபர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உபாலி குணரத்ன என்ற பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வல்லுறவுக்கு உள்ளான சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுவன் வீட்டில் தனிமையில் இருந்த போதே சந்தேக நபர், சிறுவனை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.