Header Ads



கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் 126 வது ஸ்தாபகர் தின விழா


இலங்கையின் முன்னோடிப் பாடசாலையான கொழும்பு ஸாஹிராக் கல்லூரி அதன் 126வது ஸ்தாபகர் தின விழாவினை வெகு விமரிசையாக கொண்டாடவுள்ளது. 

கல்லூரியின் அதிபர் வு. ரிஸ்வி மரைக்கார் அவர்களது தலைமையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் நடைபெறவுள்ள இவ்விழாவின் சிறப்பு பேச்சாளராக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், பேராசிரியர் யு.பு. ஹூஸைன் இஸ்மாயில் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். 

மேலும் ஸ்தாபகர் தினவிழாப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களின் நிகழ்ச்சியும், பரிசளிப்பு விழாவும் நடைபெறும். 


1 comment:

  1. Congratulation.. Try to be a best School in SriLankan..

    ReplyDelete

Powered by Blogger.