Header Ads



பிரபல ஹோட்டல் திருமணங்களில், திருடியவர் கைது - CCTV கமரா காட்டிக் கொடுத்தது

இலங்கையிலுள்ள பிரபல ஹோட்டல்களில் இடம்பெறும் திருமண நிகழ்வில் விருந்தாளி போன்று மோசடியில் ஈடுபடும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமண வைபவத்திற்கு வரும் பெண்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்களின் கையடக்க தொலைபேசி மற்றும் கைப் பைகள் திருடப்பட்டமை தொடர்பில் வரக்காபொல பொலிஸாரினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பேபுஸ்ஸ பிரதேசத்தின் பிரபல ஹோட்டலில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற இரு பெண்களின் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

கைப்பை மற்றும் கையடக்க தொலைபேசி யாரோ சிலரால் திருடி செல்லப்பட்டுள்ளதாக பெண்கள் வரக்காபொல பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். அதற்கமைய பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருட்டு சம்பவம் இடம்பெற்ற ஹோட்டலுக்கு சென்ற பொலிஸ் குழு ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடீவி கமராவை சோதனையிட்டனர். இதன் ஊடாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் கடந்த மாதங்களில் கேகாலை, மாவனல்ல, வரக்காபொல, அலவ்வ, கலிகமுவ ஆகிய பிரதேசங்களில் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.