Header Ads



மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம்

கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இன்று (30) முற்பகல் 10.55 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒருவரே காயமடைந்துள்ளார்.

சந்தேகநபர்கள் இதுவரையில் அடையாளங்காணப்படவில்லை.

மாளிகாவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

No comments

Powered by Blogger.