Header Ads



வீடொன்றில் தந்தை, மகளின் சடலங்கள் கண்டெடுப்பு

மஹியங்கனை, தம்பகொல்ல பிரதேசத்தில் வீடொன்றில் உயிரிழந்திருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

31 வயதுடைய தந்தை மற்றும் 11 வயதுடைய மகள் ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.