Header Ads



இரவு முழுவதும், நாகபாம்புடன் உறங்கிய நபர் - யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி

இரவு முழுவதும் நபர் ஒருவருடன் நாகபாம்பு ஒன்று படுத்துறங்கிய திகில் நிறைந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை தெற்கைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் நேற்று இரவு நடந்துள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

குறித்த நபர் நேற்று இரவு பதினோரு மணியளவில் தனது மெத்தைக் கட்டிலில் உறக்கத்திற்காக படுத்துள்ளார்.

பின்னர் நள்ளிரவு ஒரு மணியளவில் படுக்கை விரிப்பின் கீழ்ப்புறம் ஏதோ கடினமான சுருக்கு இருப்பதை உணர்ந்தார். படுக்கை விரிப்பு சுருங்கியுள்ளது என நினைத்த அவர் அதனைப் பெரிதுபடுத்தாமல் உறக்கக் கலக்கத்தில் தூங்கிவிட்டார்.

இந் நிலையில் அதிகாலை நான்கு மணியளவில் தனது உடலின் மேலே ஏதோ ஊர்வதுபோல உணர்ந்த அவர் திடீரென கண்விழித்துப் பார்த்தார். இதன்போது அவர் கண்ட காட்சி அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்த அவர்,

"கண் விழி்துப் பார்த்தபோது ஒரு அளவான பாம்பு என் வயிற்றுப் பகுதியால் நெளிந்தது கண்டு என்ன செய்வதென்றே தெரியாமல் அதிர்ச்சியடைந்துவிட்டேன். ஆடாமல் அசையாமல் அப்படியே படுத்திருந்தேன். பாம்பு மெதுவாக இறங்கியதும் திடீரென எழும்பி லைட்டைப் போட்டுப் பார்த்தால் நாகபாம்பு படமெடுத்தபடி நின்றது. வீட்டிலுள்ள எல்லோரும் எழுந்துவிட்டனர். நான் நினைக்கிறேன் அந்தப் பாம்பு நீண்டநேரமாக எனது அறையில் இருந்துள்ளது. நான் அறைக்கு வருவதற்கு முதல் வெளிக் கதவுகள் கதவு திறந்திருந்தது. அப்போதுதான் அந்தப் பாம்பு வந்திருக்கணும். பாம்பு என்னை ஒன்றும் செய்யாதபடியால் அதனை அடிக்கவேண்டாம் என்று தடி ஒன்றில் தூக்கிக்கொண்டு வயல் வெளி ஒன்றில் கொண்டுபோய் விட்டுவிட்டோம்." என்றார் பரபரப்புடன்.

நாம் வெளியே செல்லும்போது கதவுகளை நன்றாக பூட்டிவிட்டுச் செல்வதும் உள்ளே வந்தபின்னரும் கதவுகளை நன்றாக பூட்டிவிட்டு உறங்குவதும் முக்கியமானதாகும்.

No comments

Powered by Blogger.