முஸ்லிம் மாணவிக்கு, நடந்த கொடூரம்
நடந்து முடிந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் போது கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பாத்திமா பாலிகா மகா வித்தியாலய மாணவியொருவருக்கு நோக்குநர்களால் அநீதி இழைக்கப்பட்டதாக கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் 'விடிவெள்ளி'க்குத் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஒரு வார காலத்திற்கு முன்னர் தனக்கு எழுத்துமூலம் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை விசாரித்து உண்மையைக் கண்டறிவதற்காக மாகாண கல்வித் திணைக்களத்தின் பிராந்திய இணைப்பதிகாரி மூலம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் உண்மையாயின் சம்பந்தப்பட்ட பரீட்சை நோக்குநருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் மூலமாக நீதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இச் சம்பவம் நடந்து ஒரு வார காலத்தின் பின்னரே இந்த விடயம் தனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதாகவும் பரீட்சை நடந்த அன்றைய தினமே இது தொடர்பான முறைப்பாடு கிடைத்திருப்பின் விரைந்து நடவடிக்கை எடுத்திருக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் முள்ளிப்பொத்தானை பாத்திமா பாலிகா மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 05.08.2018 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு எமது பாடசாலை மாணவிகளும் தோற்றி இருந்தார்கள். பரீட்சை எழுதிய சில அறைகளினுள் மாணவிகளுக்கு சில நோக்குநர்கள் பரீட்சை எழுதவிடாது இடையூறுகளை ஏற்படுத்தி பிஞ்சு உள்ளங்கள் பாதிக்கும் வகையில் நடந்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட மாணவிகளும் அப்பிள்ளைகளின் பெற்றோர்களும் மிகக் கவலையுடன் எம்மிடம் முறைப்பாடு செய்துள்ளனர். அம்முறைப்பாட்டின் அடிப்படையில்,
· பரீட்சையின் முதலாவது பகுதி எழுதி முடிந்ததன் பின்னர் இடைவேளையின்போது இப்பிள்ளைகளிடம் குறிப்பிட்ட நோக்குநர் உங்கள் வகுப்பில் யார் கெட்டிக்காரர், அவர் பாடசாலையின் இறுதிப்பரீட்சையில் எத்தனை புள்ளி எடுத்துள்ளார் எனவும் (குறிப்பிட்ட பிள்ளை 192 எனக் கூறியுள்ளார்) கேட்டுவிட்டு பகுதி II ஆரம்பிக்கப்பட்ட போது குறிப்பிட்ட அப்பிள்ளையிடம் பின்வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
· மாணவி பேனையால் விடையை எழுத ஆரம்பிக்கும்போது பேனையை வாங்கி எடுத்த அந்நோக்குநர் தனது கடமை ரீதியான வேலைகளை இப்பேனையின் மூலம் முடித்துவிட்டு பரீட்சை நேரம் முடியும் தறுவாயில் பேனையைக் கொடுத்துள்ளார். அதுவரை இப்பிள்ளை தனது பேனை வரும் எனக் காத்திருந்து விட்டு பின்னர் ஏமாற்றத்துடன் பென்சிலால் விடை எழுதி முடித்துள்ளார்.
· எழுதிக் கொண்டிருக்கும்போது மாணவி இருந்த கதிரையில் நோக்குநர் தாளம் தட்டிக்கொண்டு மாணவியை பரீட்சை எழுதவிடாது இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளார்.
· விடை எழுதும்போது குறிப்பிட்ட மாணவியின் தாளையே அருகில் இருந்து நோக்குநர் பார்த்துக் கொண்டிருந்ததுடன் அடிக்கடி புரட்டிப் புரட்டி பார்த்து பரீட்சை எழுதவிடாது இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளார்.
· பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் கொண்டு சென்ற கொம்பாஸ், உணவுப் பொதி போன்றவைகளை குழந்தைகள் மூலம் ஒரு இடத்தில் வைப்பதற்கு வழிப்படுத்துவதற்குப் பதிலாக நோக்குநர் பறித்து அவைகளை சிறுவர் உள்ளம் குழம்பும் வகையில் இவர்களுக்குத் தெரியாத இடத்தில் கொண்டு சென்று வைத்துள்ளார்.
· மற்றும் ஒரு அறையில் இருந்து நோக்குநர் ஒரு மாணவிக்கு பொலிஸில் கொடுப்பேன் என 3 தடவைகள் மிரட்டி சிறுவர் உள்ளத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இவ்வாறு இந்நோக்குநர்களின் அத்துமீறிய நடத்தையினால் தங்கள் பிள்ளையின் விடைத்தாளுக்கு ஏதேனும் சதி செய்திருப்பார்களோ என்று என்னும் அளவுக்குப் பாதிக்கப்பட்ட பிள்ளையின் பெற்றோர் அச்சத்துடனும் மனக்குழப்பத்துடனும் கலங்கிப்போய் உள்ளார்கள் என்பதை தங்கள் கவனத்தில் கொண்டு வருகின்றோம். அத்தோடு பெறுபேறு வருகின்றபோது எதிர்பார்த்திருக்கும் பெறுபேறு குறைவாக காணப்படின் பிள்ளையின் விடைத்தாளை காண்பிப்பதற்கு சந்தர்ப்பம் ஒன்றைத் தருவார்களா என்று பெற்றோர் கேட்கின்றனர் என்பதையும் தங்கள் கவனத்தில் கொண்டு வருகின்றோம்.
மேற்படி விடயத்தை கவனத்தில் எடுத்து விசாரணை செய்து பல்வேறு தியாகங்களுடன் இராப்பகலாகக் கற்று மிக நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் பரீட்சை எழுதியுள்ள இப்பிள்ளைகளுக்கு அநீதி இழைத்துள்ள இந்நோக்குநர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்ட பிள்ளைக்குரிய நியாயமான தீர்வினையும் பெற்றுத்தருவீர்கள் என எதிர்பார்க்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோக்குநர் ஒரு மிருகம் என்றுதான் சொல்ல வேண்டும், அவரது பெயரை குறிப்பிட்டிருக்களாம்
ReplyDeleteஇந்த நோக்கினார் ஒரு தமிழ் பயங்கரவாதி அவனை பற்றி ஏராளமான செய்திகள் கடந்த வாரங்களில் வெளிவந்தது. இந்த வன்மம் பிடித்த மிருகங்கள் எவ்வளவு கொடூரமானவர்கள்
ReplyDeleteதமிழ் பயங்கரவாத எச்சங்களின் ஒருத்தனாக இருக்க வேண்டும்.
ReplyDelete