Header Ads



மாளிகாவத்த துப்பாக்கிச்சூட்டில், முஸ்லிம் சகோதரி வபாத்

மாளிகாவத்தை ஜும்ஆ சந்தியில் லொண்டரியொன்றுக்கு அருகாமையில் இன்று (26) மாலை  6.00 மணிக்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாளிகாவத்தையில் வசிக்கும் 31 வயதுடைய  மொஹமட் மும்மீர் சித்தி ரினேஷா எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாளிகாவத்தைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

3 comments:

  1. மீண்டும் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு ஆயுத கலாசாரம். விடுதலை புலிகளின் ஆயுதங்களை முஸ்லிம்கள் வைத்திருப்பது பற்றி சற்று ஆழமாக விசாரிக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  2. Inna Lillhi Wainna Ilaihi Rajiun. Allahumma Ahfirlaha Warahamha

    ReplyDelete
  3. ஒழுங்கா செய்திய படிங்க அனுசத்து உங்கள மாதிரி பயங்கரவாதிகள் அல்ல அவங்க சமூக விரோதிகள் ஏதாவது வழியில் அழிவதை பார்த்து சந்தோச படுங்க அதை விட்டு இனவாதம் பேசாதீங்க.

    ReplyDelete

Powered by Blogger.