Header Ads



இலங்கையின் உயர்ந்த, மனிதனுக்கு திருமணம்


முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் முன்னாள் போராளி ஒருவருக்கு அமைச்சர் மனோ கணேசன் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.

இது தொடர்பில் இன்று முன்னாள் போராளியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றினையும் அமைச்சர் மனோ கணேசன் தமது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகம் ஊடாக பகிர்ந்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் நடமாடும் சேவை இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றது.

இந்த சேவையின் ஊடாகவே கடந்த 10 வருடங்களாக சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த புதுக்குடியிருப்பை சேர்ந்த குணசிங்கம் கஜேந்திரனுக்கு சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த முன்னாள் போராளி 7 அடி 3 அங்குலம் உயரமுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Poraali illa. Munnal thiviravadi.

    ReplyDelete
  2. பலர் வலுக்கட்டாயமாக சேர்த்துக்கொள்ளப்பட்டனர். குடும்பத்துக்கு ஒரு பிள்ளை என்ற அடிப்படையில். கடைசியில் பிரபாகரனின் கதை, "வைக்கோல் பட்டை நாய் போன்று ஆகிவிட்டது".

    ReplyDelete

Powered by Blogger.