Header Ads



கோழிக் குஞ்சுகளுக்கு உணவளிக்க சென்றவரை, நாகப் பாம்பு தீண்டியது

திருகோணமலை, முத்துநகர் பகுதியில் நாக பாம்பு தீண்டி பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முத்துநகர் பகுதியைச் சேர்ந்த நூர் முகம்மட் ரஸீனா (59வயது) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் கிராமங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன.

அக்கோழி குஞ்சுகளுக்கு உணவு வைப்பதற்காக கோழிக்கூட்டிற்குள் சென்றுள்ளனர். இதன்போது, கூட்டினுள் மறைந்திருந்த நாக பாம்பு அவரை தீண்டியுள்ளது.

இந்நிலையில், குறித்த பெண்ணின் வீட்டில் யாரும்மில்லாத நிலையில் கந்தளாய் பகுதியிலுள்ள அவரின் சகோதரிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து உடனடியாக வருமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து தீண்டிய பாம்பையும் அடித்து எடுத்துக்கொண்டு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

எனினும், வைத்தியசாலைக்கு வரும் வழியிலேயே பாம்பு தீண்டிய பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மரணம் தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.