Header Ads



எவனாவது, எவளாவது பகடிவதை செய்கிறார்களா..? உடனே அழைத்து முறையிடுங்கள்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்க்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகடிவதை மற்றும் ஏனைய வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்காகவும் பகடிவதைகள் தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்காகவு, புதிதாக அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதோடு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விசேட அலுவலகமொன்றும் நிறுவப்பட்டுள்ளது.

அதற்கமைய, 24 மணிநேரமும் தொழிற்படவுள்ள இந்த 011-2123700 தொலைபேசி இலக்கத்துக்கு, நாடு முழுவதிலுமிருந்தும் அழைப்புகளை ஏற்படுத்தி, பகடிவதைகள் தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியுமென்றும் அதன் பின்னர், அந்த முறைப்பாடுகள் தொடர்பில், உடனடியாகப் பல்கலைக்கழக அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி, அவர்களூடாக, பிரதேச பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் அமைக்கப்பட்டுள்ள விசேட அலுவலகமானது, அரச விடுமுறை தினங்களைத் தவிர்ந்த ஏனைய தினங்களில், காலை 8.30 முதல் பிற்பகல் 4.00 மணிவரை திறந்திருக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. It is not wrong having fun with freshers,but it should not go beyond the limit. Some people are misusing the freedom and making miserable situation harming bodily. One way it is good to be friendly with seniors and they will helpful in studies. However, everything has a limit and it should not be over taken.

    ReplyDelete

Powered by Blogger.