Header Ads



இளம் அரசியல்வாதியின் திருமணம், அலரி மாளிகையில் நடக்கவுள்ளதாம்...!

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகனின் திருமணம் இலங்கை வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் மிகவும் பிரமாண்டமாக அவரின் திருமணம் நடைபெறுவள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

கொத்தலாவல பாதுகாப்பு வைத்திய பீடத்தின் மருத்துவ மாணவியான சரூபா சமன்கி மனதுங்க என்ற பெண்ணுடன் இன்று சத்துர சேனாரத்ன திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.

அலரி மாளிகையில் பல அரசியல்வாதிகளின் பங்களிப்புடன் திருமணத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் அலரி மாளிகையில் இடம்பெறும் முதல் திருமணம் இது என குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய இலங்கை வரலாற்றில் இந்த திருமணம் இடம்பிடிக்கும் என கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

1 comment:

Powered by Blogger.