Header Ads



"நெடுந்தீவிற்கு ஹெலிகொப்டரில், பறந்த வினாத்தாள்கள்"

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலையின் காரணமாக, தற்பொழுது  நடைபெற்றுவரும் உயர் தர பரீட்சைகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் ஹெலிகொப்டர் மூலம் குறித்த பகுதிக்கு  கொண்டு​​செல்லப்பட்டன​.

​ நேற்று மற்றும் இன்றைய தினங்களில்தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாகவும் கடற்பகுதிகளில் வீசும் வேகமான காற்றின் காரணமாகவும், கடல் மார்க்கமாகப் பயணம் செய்யமுடியாத காரணத்தால், பரீட்சைக்கான வினாத்தாள்களை  ஹெலிகொப்டர்  மூலம் கொண்டு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.