Header Ads



"தாய் மனசு தங்கம்" - கல்முனை நீதிமன்றத்தில் நடந்த உண்மைச் சம்பவம்


கல்முனையில் தெருவில் மூதாட்டியை கைவிட்ட பிள்ளைகள் மூவருக்கும் தலா 50ஆயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்ல கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் அனுமதித்தார். மூதாட்டியின் பராமரிப்பிற்காக மாதமொன்றுக்கு 3 பிள்ளைகளும் தலா 5ஆயிரம் ரூபா வீதம் மொத்தமாக 15ஆயிரம் ரூபாவைச் செலுத்தவேண்டும் என்றும் அவர் தீர்ப்பளித்தார். கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்று (9) விசாரிக்கப்பட்ட போது இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. நேற்று மன்றுக்கு பிள்ளைகள் நால்வரும் வந்திருந்தனர். குறித்த மூதாட்டியும் கல்முனை ஆஸ்பத்திரியிலிருந்து மன்றுக்கு வந்திருந்தார்.

அடுத்த தவணை எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 4ஆம் திகதி என நீதிவான் கூறினார்.

மூதாட்டியை எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 4ஆம் திகதி வரை கல்முனை ஆதாரவைத்தியசாலையில் வைக்கும்படி நீதிவான் உத்தரவிட்டார். அதற்கிடையில் கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக சமுகசேவை உத்தியோகத்தரையும் 4ஆம் திகதி மன்றிற்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டார். குறித்த மூதாட்டியை பொருத்தமான வயோதிபர் இல்லத்தில் சேர்ப்பதற்கு அந்த அதிகாரி நடவடிக்கை மேற்கொள்ளுமுகமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூதாட்டி கல்முனை இளைஞர்சேனை இளைஞர்களிடம் கூறியதாவது:

முதலில் எனது பிள்ளைகளை வெளியில் எடுத்துவிடுங்கள். அவர்கள் கூட்டுக்குள் இருக்கும்போது எனக்கு சோறும் வேண்டாம், தண்ணியும் வேண்டாம். அவர்களை வெளியில் விடுங்கள். அவர்களது காசுவேண்டாம். நான் பிச்சை எடுத்தாவது பிழைப்பேன். அவர்களை கஸ்டப்படுத்த வேண்டாம் என்றார்.

கடந்த 26 ஆம் திகதி வியாழக்கிழமை பிள்ளைகளால் கொண்டுவந்து கல்முனை ஆதாரவைத்தியசாலை முன்பாக இறக்கிவிடப்பட்டு அநாதரவாகக்கிடந்த மூதாட்டியை கல்முனைப் பிராந்திய இளைஞர்சேனை அமைப்பினர் கண்டு உடனடியாக கல்முனை ஆதாரவைத்தியசாலையில் சேர்த்தனர்.

இளைஞர் சேனையால் மீட்கப்பட்ட மூதாட்டியை பின்னர் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்ப்பதற்காக நீதிமன்ற அனுமதி கோரி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இளைஞர்சேனை அமைப்பு வழக்கொன்றை தாக்கல் செய்தது.

மேற்படி வழக்கை விசாரித்த நீதிபதி றிஸ்வான் குறித்த மூதாட்டியை கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சை பெறுமாறும் பணித்ததுடன் அந்த மூதாட்டியின் பிள்ளைகள் மூவரையும் நேற்று (9)ஆஜராகும் வண்ணம் அழைப்பாணையையும் பிறப்பித்திருந்தார்.

2 comments:

  1. நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்;

    அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்;

    இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன;

    ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக;

    என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”

    (அல்குர்ஆன் : 31:14)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! அல்குர்ஆன் 17:23

    இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! அல்குர்ஆன் 17:244

    ReplyDelete

Powered by Blogger.