Header Ads



கோத்தபாய ஜனாதிபதியானால், மகிந்தவினால் கட்டுப்படுத்த முடியாது - நாமலிடம் கூறிய நிமல்

கோத்தபாய ஜனாதிபதியானால் அவரை மகிந்தவினால் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமல் ஸ்ரீபால டிசில்வா தெரிவித்துள்ளார்.

தன்னிடம் வேறு ஒரு விடயமாக உரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் நிமால் ஸ்ரீபால டி சில்வா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச தனித்தீர்மானத்தை எடுக்கக்கூடியவர். எனவே அவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கவேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார்.

எனினும் இந்தக்கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ச எவ்வித பதில்களையும் தெரிவிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 comment:

  1. இலங்கைக்கு வேண்டியது இவர்களது 'சிந்தனை'களும் சட்டங்களும் அல்ல; மாறாக, இறைமறையின் சித்தாந்தங்களும் சட்டங்களுமே!

    ReplyDelete

Powered by Blogger.