ஞானசாரரின் விடுதலைத் தொடர்பில், ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்படும்
சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, நாளைய தினம் சத்திரசிக்சை செய்யப்படவுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அவரது சிறுநீரகப் பையில் காணப்படும் கல்லை அகற்றுவதற்கான, சத்திரசிகிச்சையானது கடந்த வாரம் செய்யப்படவிருந்த நிலையில், ஞானசார தேரரின் உடல் நிலையில் காணப்பட்ட பலவீனம் காரணமாக, குறித்த சத்திரசிகிச்சையானது பிற்போடப்பட்டது.
இந்த நிலையிலேயே, நாளைய தினம் தேரருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஞானசார தேரரைப் பார்வையிடுவதற்காக, இன்று ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு விஜயம் செய்த மாகல்கந்தே சுதத்த தேரர், ஞானசாரரின் விடுதலைத் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Is he a duplicate of balusara?
ReplyDelete