Header Ads



மரத்திலிருந்து விலகுவது, என்ற பேச்சுக்கே இடமில்லை - பாயிஸ்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை, என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரங்களுக்கான, பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள  கே.ஏ. பாயிஸ்  தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளராக, பாயிஸ்  நியமிக்கப்படுவதற்கு மன்சுர் எம்.பி. எதிர்ப்பு வெளியிட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பில் தெரிவிக்கையிலேயே, பாயிஸ் இப்படிக் கூறினார்.

மேலும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பெரும் தலைவர் அஸ்ரப் மற்றும் தற்போதைய தலைவர் ஹக்கீம் ஆகியோரின் காலத்தில், தாம் தேசிய அமைப்பாளராக நெடுங்காலம் இருந்ததை சுட்டிக்காட்டிய பாயிஸ் தமக்கு பதவிகள் முக்கியமல்ல, சேவை செய்வதே முக்கிய நோக்கம் எனவும் குறிப்பிட்டுக் கூறினார்.

1 comment:

Powered by Blogger.