Header Ads



உயிரிழந்த கலைஞருக்கு, வாழ்த்து அனுப்பிய ரணில் - சீறிப் பாய்கிறார் மகள்

உயிரிழந்த கலைஞர் ஒருவருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் உயிரிழந்த சுனில் விமலவீர என்பவருக்கே பிரதமர் வாழ்த்து அனுப்பியுள்ளார்.

குறித்த பிறந்த நாள் வாழ்த்தினை பார்த்து, உயிரிழந்த கலைஞரின் மகள் அபிஷேகா விமலவீர கடும் கோபமடைந்துள்ளார்.

பின்னர் அவர் அந்த வாழ்த்தினை பேஸ்புக்கில் இணைத்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்,

அந்த பதிவில்,

“தந்தை உயிரிழந்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன.

என்ன கூறுவதென்று தெரியவில்லை.

இலங்கை ஒரு அதிசயமான நாடு

இந்திய பெருங்கடலில் ஒரு விசித்திரமான முத்து

தந்தை இன்னமும் எங்கள் உலகில் வாழ்கின்றமையினால் நன்றி தெரிவித்து கொள்கின்றேன்.

இது அரசியல் விமர்சனம் அல்ல மனிதாபிமான கருத்து” என அவர் பதிவிட்டுள்ளார்.

இதன் ஊடாக ஒன்றரை வருடங்கள் கடந்தும் தந்தை இறந்த விடயம் தெரியாமல் அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதனை மறைமுகமாக கூறியுள்ளார் என குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.