Header Ads



முஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி

பஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் முகத்­தி­ரை­யினை அகற்ற வேண்டும் எனவும் தெரி­வித்­ததைத் தொடர்ந்து நிகாப் அணிந்­தி­ருந்த முஸ்லிம் பெண்­ணொ­ருவர் பயங்­க­ர­வா­தி­யைப்போல் நடத்­தப்­பட்ட சம்­பவம் தொடர்பில் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

கண்கள் மாத்­திரம் வெளியில் தெரி­யக்­கூ­டி­யதும் உடலின் ஏனைய பாகங்கள் மறைக்­கப்­பட்­ட­து­மான நிகாப் ஆடை­யினை அணிந்­தி­ருந்த பெண்­ணொ­ருவர் ஈஸ்­டொன்­னி­லி­ருந்து பிரிஸ்டொல் நகர மத்­திய நிலை­யத்­திற்கு புறப்­பட்டுச் சென்ற 24 ஆம் இலக்க 'பெஸ்ட் பஸ்' என்ற பஸ் வண்­டியில் தனது இரண்டு மாதக் குழந்­தை­யுடன் ஏறிய சற்று நேரத்தில் நிகாப் அணிந்­தி­ருந்த பெண்ணை விமர்­சிக்கத் தொடங்­கினார். 

'இந்த உலகம் ஆபத்­தா­னது' எனத் தெரி­வித்த பஸ் சாரதி குறித்த பெண்ணின் முகத்தைப் பார்க்க வேண்டும் என வற்­பு­றுத்­தி­ய­தாக 20 வய­தான அப் பெண் தெரி­வித்தார்.

நான் பயங்­க­ர­மாக இருப்­ப­தா­கவும், அபா­ய­க­ர­மாக இருப்­ப­தா­கவும் தெரி­வித்த அவர் பய­ணத்­தின்­போது தொடர்ந்து பேசிக்­கொண்டே வந்­த­தா­கவும், நான் அந்த பஸ் வண்­டியை குண்டு வைத்து தகர்க்க வந்­துள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார். 'நான் எனது குழந்­தை­யுடன் வந்­தி­ருக்­கின்றேன், இது எப்­படி சாத்­தி­ய­மாகும் என நான் வின­வினேன்' என குறித்த பெண் வின­வி­ய­தாக ஊட­க­மொன்று தெரி­வித்­துள்­ளது.

தொடர்ச்­சி­யாக என்னை அவ­ம­திக்கும் வித­மாக பேசிக்­கொண்­டி­ருந்த சாரதி ஒரு கட்­டத்தில் என்னை பயங்­க­ர­வாதி எனத் தெரி­வித்தார். பஸ்ஸில் இருந்­த­வர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்­தனர். நான் இந்த ஆடை­யினை ஏன் அணிந்­தி­ருக்­கிறேன் எனவும் கேள்வி எழுப்­பினார் எனவும் அப் பெண் தெரி­வித்தார்.

நான் பொது இடத்தில் அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்றேன். நான் மிகவும் ஏமாற்­ற­ம­டைந்­துள்ளேன். இது 2018, நாம் இவ்­வாறு இருக்கக் கூடாது. நான் ஒரு கட்­டுப்­பாட்டை பின்­பற்றி வாழ்­கின்ற ஒருவர் எனவும் அப்பெண் குறிப்­பிட்டார்.

எவ்­வா­றெ­னினும், குறித்த சாரதி மிகப் பெரும் தவ­றி­ழைத்­துள்­ள­தாக தெரி­வித்­துள்ள 'பெஸ்ட் பஸ்'  தற்­போது மன்­னிப்புக் கோரி­யுள்­ள­தோடு சாரதி மீது ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.

எமது சார­தி­யொ­ருவர் தனது தனிப்பட்ட கருத்தினை வெளியிட்டதன் காரணமாக மனவேதனைக்குள்ளான வாடிக்கையாளரிடம் நாம் முழுமையாகவும் பூரணமாகவும் மன்னிப்புக் கோருகின்றோம் என 'பெஸ்ட் பஸ்' நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.  

M.I.Abdul Nazar

4 comments:

  1. Kind request!

    Make a differents between national and international news. Be a responsible media.

    ReplyDelete
  2. சாரதி அவதானமாக இருப்பது அவசியம்தான் உலகம் அப்படித்தான் இருக்கிறது.

    ReplyDelete
  3. அன்நிய ஆண்களின் பார்வையிலிருந்து பாதுகாக்கும் கண்ணியமான ஆடை உலக இன்பங்களுக்கு அடிமையானவர்களுக்கு வெறுப்பாக இருப்பது ஆச்சரியமான விடயமல்ல.

    ReplyDelete
  4. The objective of the driver's behaviour is obvious..he has been misguided..

    ReplyDelete

Powered by Blogger.