Header Ads



கொழும்பு மாநகரசபையின், எதிர்க்கட்சித் தலைவராக மன்சில் நியமனம்

கொழும்பு மாந­கர சபையில் நடை­பெறும் ஊழல், மோச­டிக்கு எதி­ராக எதிர்க்­கட்சி எதிர்ப்­பினை வெளி­யி­டு­வ­துடன் கொழும்பு மாந­கரில் வரி செலுத்­து­வோரின் நலன்­க­ளுக்­காக குரல் கொடுக்கும் என கொழும்பு மாந­கர சபையின் எதிர்க்­கட்சித் தலைவர் எம்.எச்.மன்சில் தெரி­வித்தார்.

கொழும்பு மாந­கர சபையின் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக எதிர்க்­கட்­சியின் பெரும்­பான்மை உறுப்­பி­னர்­களால் எம்.எச். மன்சில் ஏற்றுக் கொள்­ளப்­பட்­ட­தை­ய­டுத்து அது தொடர்பில் தெளி­வு­ப­டுத்தும் ஊடக மாநாடு ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைமைக் காரி­யா­ல­யத்தின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது. ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே எம்.எச். மன்சில் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

 எதிர்க்­கட்சித் தலைமைப் பத­விக்கு எனது பெயர் பரிந்­து­ரைக்­கப்­பட்­டதும் எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பொது­ஜன பெர­மு­னவைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் உறுப்­பி­னர்கள் எதிர்ப்பு வெளி­யிட்­டனர். முன்னாள் எதிர்க்­கட்சித் தலைவர் எதிர்க்­கட்சித் தலைமைப் பதவி தமது ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­ன­வுக்கு வழங்­கப்­பட வேண்­டு­மென 25 உறுப்­பி­னர்­களின் கையொப்­பங்­க­ளுடன் கூடிய கோரிக்­கையை முன்­வைத்தார். இத­னை­ய­டுத்து சபையில் பிரச்­சினை எழுந்­த­தை­ய­டுத்து இறுதித் தீர்­மானம் கட்சித் தலை­வர்­களின் கூட்­டத்தில் மேற்­கொள்­ளப்­ப­டு­மெனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

கடந்த 1 ஆம் திகதி மாந­கர சபை கேட்போர் கூடத்தில் கட்­சித்­த­லை­வர்­களின் கூட்டம் நடை­பெற்­றது. இக்­கூட்­டத்தில் எனக்கு ஆத­ர­வாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் 28 உறுப்­பி­னர்கள் கையொப்­ப­மிட்டு ஆவ­ணத்தைச் சமர்ப்­பித்­தனர். ஆனால் பொது­ஜன பெர­முன கட்­சி­யி­ன­ருக்கு 25 உறுப்­பி­னர்­களே ஆத­ரவு வழங்­கினர். இந்­நி­லையில் என்னால் பெரும்­பான்மை நிரூ­பிக்­கப்­பட்­டதால் நான் கொழும்பு மாந­கர மேய­ரினால் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டேன்.

எதிர்த்­த­ரப்பில் உள்ள மக்கள் விடு­தலை முன்­னணி மற்றும் பொது­ஜன பெர­முன கட்­சியைச் சேர்ந்­த­வர்கள் தவிர ஏனைய அனை­வரும் எனக்கு ஆத­ரவு வழங்­கி­னார்கள். ஆனால் அசாத் சாலி எனக்கு ஆதரவு வழங்கவில்லை.

எனக்கெதிராக செயற்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் அசாத் சாலிக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்குமா என்பது பற்றி எனக்குத் தெரியாது என்றார்.
-விடிவெள்ளி 

No comments

Powered by Blogger.