Header Ads



சிங்கள பௌத்தன் என்ற வகையில், ஞானசாரரை பார்வையிடச் செல்வேன்

சிங்கள பௌத்தன் என்ற வகையில் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பார்வையிடச் செல்வேன் என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,

நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றச்சாட்டின் பேரில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை பார்வையிடத் திட்டமிட்டுள்ளேன்.

எதிர்வரும் நாட்களில் சிறைச்சாலைக்கு சென்று ஞானசார தேரரை பார்வையிடுவேன்.

ஆளும் கட்சியின் அமைச்சர் என்ற ரீதியில் நான் சிறைச்சாலைக்கு செல்லப் போவதில்லை.

சிங்கள பௌத்தன் என்ற வகையில் நான் ஞானசார தேரரை பார்வையிடச் செல்வேன்.

ஏற்கனவே சிறைச்சாலைக்குச் சென்று ஞானசார தேரரை பார்வையிட்டேன்.

மீண்டும் ஒரு தடவை அவரை பார்வையிடுவதற்கு எவ்வித தடையும் கிடையாது என துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. இந்த கபோதியை கைது செய்வதாக ஆடிய நாடகத்தில் இவனை ஒழித்து வைத்து மக்களை ஏமாற்றியவன்தானே... நீ மட்டும் இல்லை உன்னுடைய முழு கள்ளாட்சி நண்பர்கள் அனைவரும் இந்த பகுதிக்கு குரல் கொடுப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.