Header Ads



காங்­கே­ய­னோடை பள்­ளி­வா­சலின் அதிசிறந்த முன்மாதிரி, ஏனைய ஊர்களும் பின்பற்றுமா..?


போதைப் பொருள் பாவனை மற்றும் விற்­ப­னைக்கு எதி­ராக இலங்கை முஸ்லிம் அமைப்­புகள்  தமது செயற்­பா­டு­களை தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

கடந்த காலங்­களில் போதைப்­பொருள் பாவனை மற்றும் விற்­ப­னைக்கு எதி­ராக பள்­ளி­வா­சல்­களில் ஜும்ஆ பிர­சங்­கங்கள் உள்­ளிட்ட விழிப்­பு­ணர்­வுகள் இடம்­பெற்­றன. எனினும் அவற்றை வரு­டத்தில் ஓரிரு தினங்­க­ளுக்கு மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­தாது தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­க வேண்­டி­யதும் அதற்­கென தனி­யான நிறு­வ­னங்­களை உரு­வாக்க வேண்­டி­யதும் அவ­சி­ய­மாகும்.

அந்த வகையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் காங்­கே­ய­னோடை பிர­தே­சத்­தி­லுள்ள ஜாமிஉல் மஸ்ஜித் ஜும்­ஆப்­பள்­ளி­வா­சலில் போதை­வஸ்த்­துக்­களோ புகைத்தல் பொருட்­களோ பாவிக்கமாட்டோம் அல்­லது அவற்­றுக்குத் துணை போக­மாட்டோம் என அப் பிர­தே­சத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கிகள் அனை­வரும் பொது மக்கள் முன்­னி­லையில் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்­கதும் முன்­மா­தி­ரி­மிக்­க­து­மான நிகழ்வாகும்.

அதே­போன்று கடந்த ஹஜ் பெருநாள் தினத்­தன்று புத்­தளம் மாவட்­டத்தில் உள்ள கண­மூலை பிர­தே­சத்­திலும் இதே­போன்று பள்­ளி­வாசல் நிர்­வா­கிகறாம் மக்களும் போதைப் பொருள் பாவ­னையை தமது பிர­தே­சத்­தி­லி­ருந்து துடைத்­தெ­றிய உறு­தி­பூண்­டுள்­ளனர். இவ்­வாறு சகல பிர­தே­சங்­க­ளி­லு­முள்ள பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கிகள் முன்­வந்து முஸ்லிம் சமூ­கத்தைப் பீடித்­துள்ள போதைப் பொருள் பாவனை எனும் சீர்கேட்டிலிருந்து அனைவரையும் மீட்டெடுக்க பாடுபட வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாக மாறியுள்ளது.

போதைப் பொரு­ளுக்கு எதி­ராக முஸ்­லிம்கள் கடந்த காலங்­களில் முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கை­களை  தேசிய அபா­ய­கர ஔட­தங்கள் கட்­டுப்­பாட்டுச் சபையின் தலைவர் டாக்டர் நிலங்க சம­ர­சிங்க பாராட்­டி­யி­ருந்தார். எனினும் இந்த நட­வ­டிக்­கைகள் தொடர்ச்­சி­யாக இடம்­பெற வேண்­டி­யதன் அவ­சி­யத்­தையும் அவர் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

போதை வியா­பா­ரி­களால் இன்று இளம் தலை­மு­றை­யினர் இலக்கு வைக்­கப்­பட்­டுள்­ளனர். குறிப்­பாக  பாட­சா­லை­களில் கல்வி பயிலும் மாண­வர்­களை போதைப் பொரு­ளுக்கு அடி­மை­யாக்கும் முயற்­சிகள் திட்­ட­மிட்ட வகையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஏன் பல முஸ்லிம் பிர­தேச பாட­சா­லை­களில் கூட மாண­வர்கள் மத்­தியில் போதைப் பழக்கம் ஊடு­ரு­வி­யுள்­ளது. பாட­சா­லை­களை அண்­மித்த பகு­தி­களில் போதை மாத்­தி­ரைகள் விற்­பனை இடம்­பெற்று வரு­கி­றது. எனினும் இவற்றைக் கட்­டுப்­ப­டுத்­து­வதில் பொலி­சாரும் அதி­கா­ரி­களும் தோல்­வி­ய­டைந்­துள்­ளனர்.

என­வேதான் போதைப்­பொருள் பாவனை, விற்­பனை மற்றும் போதைப் பொருள் கடத்­தல்­களில் ஈடு­ப­டு­ப­வர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்டு தண்­டிக்­கப்­பட வேண்டும். இது விட­யத்தில் அரசு தாம­தி­யாது நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்.

இஸ்லாம் போதையை ஹரா­மாக்­கி­யுள்­ளது என்ற வகையில் போதைக்கு எதி­ரான போராட்­டத்தை முன்­னெ­டுக்க வேண்­டிய பாரிய கடப்­பாடு எம்­மீது சுமத்­தப்­பட்­டுள்­ளது. இது விட­யத்தில் பள்­ளி­வா­சல்கள், பொது நிறு­வ­னங்கள் ஒன்­று­பட்டுச் செயற்­பட வேண்டும்.

குறிப்­பாக இலங்­கையில் போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்கும் தேசிய அபா­ய­கர ஔட­தங்கள் கட்­டுப்­பாட்டுச் சபை­யுடன் இணைந்து தத்­த­மது பிர­தே­சங்­களில் விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது பள்­ளி­வா­சல்கள் மற்றும் பாட­சாலை நிர்­வா­கங்­களின் கடப்­பா­டாகும். இதன் மூலம் நமது சமூ­கத்தில் போதை­வஸ்துப் பாவ­னையை கட்­டுப்­ப­டுத்த முடி­யு­மா­க­வி­ருக்கும்.

அதே­போன்று முஸ்லிம் சமூ­கத்தில் போதைக்கு அடி­மை­யா­னோ­ருக்கு தேபோன்று முஸ்லிம் சமூகத்தில் போதைக்கு அடிமையானோருக்கு புனர்வாழ்வளிக்கும் நிலையங்கள் இல்லாமையும் கவலைக்குரியதாகும். இவ்வாறான நிறுவனம் ஒன்றை உடனடியாக ஆரம்பிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இது தொடர்பிலும் சகலரும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர்.

(விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்)

1 comment:

  1. puttalam.perukkuwattan ..ilum sumaar 4 maathankaluku munnar jumma masjid nirwaha munnilayil ...ooril ulla wiyaapaarihal matrum pothumkkal jumma tholuhayyay thodarnthu kayyppom ittu thawirnthu kondom ena waakuruthy alittarhal....
    ithu newsku warala...

    ReplyDelete

Powered by Blogger.