Header Ads



பிக்குவின் சடலம் மீட்பு

கெக்கிராவை இப்பலோகம, ஹிரிபிட்டியாகம பிரதேசத்தில் வீட்டின் கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில், இளம் பிக்கு ஒருவரின் சடலத்தை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

மரதன்கடவலை தோருவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்த பிக்கு ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பிக்கு தூக்கில் தொங்கிய வீட்டில் சிறு வயதில் வசித்து வந்துள்ளார். நேற்றைய தினம் அந்த வீட்டுக்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கண்டி மத்துரட்ட பிரதேசத்தை சொந்த இடமாக கொண்ட 27 வயதான இந்த பிக்கு, துறவரம் பூணும் முன்னர், இராணுவத்தில் கடமையாற்றியுள்ளதுடன் மருத்துவ காரணங்களுக்காக சேவையில் இருந்த விலகி ஓய்வுபெற்றிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிக்குவின் மரணம் தொடர்பான விசாரணைகளை கெக்கிராவை மாவட்ட நீதவான் நடத்தியுள்ளார். அத்துடன் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

பிக்குவின் மரணம் தற்கொலை, கொலையா என்பதை கண்டறிய இப்பலோகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் இராணுவப் பொலிஸாரும் தனியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.