Header Ads



"வறட்சியான காலத்தில், விசித்திரக்கனவு காணும் வாசுதேவ"

நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கனவில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், குளிர்காலத்தில் அவ்வாறான கனவுகள் வரும் ஆனால் வறட்சியான காலத்திலும் வாசுதேவ நாணயக்காரவிற்கு கனவு வருவது அதிசயமாக உள்ளது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு, பிரதமர் பதவியை வழங்க ஜனாதிபதி விருப்பத்துடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார வெளியிட்டுள்ள தகவலில் உண்மையில்லை.

இது வெறும் கனவு மாத்திரமே, குளிர்காலத்தில் அவ்வாறான கனவுகள் வரும், ஆனால் வறட்சியான காலத்திலும் இவ்வாறான விசித்திர கனவு வாசுதேவ நாணயக்காரவிற்கு வருவது அதிசயமாக உள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்தராஜபக்ஷவின் சகோதரரது மரண வீட்டுக்கு சென்றதாலேயே அவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.