Header Ads



ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க.க்கு சாதகமான நிலைமையா..?

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சிக்கே சாதகமான நிலைமை ஏற்படும் என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்தில் எவ்வளவு குறைகள் இருந்தாலும் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வேண்டும். நாட்டில் அமுலில் இருக்கும் சட்டத்திற்கு அமைய வேகமாக திருடர்களை பிடிக்க முடியாது.

அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்திற்கு அமைவாகவே முன்னெடுக்கப்படும் எனவும் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.