Header Ads



வட மாகாண சபை, மரணிக்கப் போகிறது - சிவாஜிலிங்கம்

எதிர்வரும் ஒக்டோபர் 25ம் திகதி வடக்கு மாகாண சபை இயற்கை மரணம் எய்துகிறது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒக்டோபர் 25ம் திகதிக்குப் பின்னர் யார் அமைச்சர் என்றோ? யார் உறுப்பினர் என்றோ? சண்டை பிடிக்க எவரும் இருக்கப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

வட மாகாணசபையின் 129வது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் 25ம் திகதி வடக்கு மாகாண சபை இயற்கை மரணம் எய்துகிறது. அதற்கு பின்னர் யார் அமைச்சர் என்றோ? யார் உறுப்பினர் என்றோ? சண்டை பிடிக்க எவரும் இருக்கப்போவதில்லை.

செப்டம்பர் 5 மற்றும் 7ம் திகதிகளில் அமைச்சர்கள் விவகாரம் குறித்த வழக்குகள் நடைபெறவுள்ளன. உறுப்பினர்கள் பலர் முதலமைச்சர் ஈகோ மனநிலையுடன் நடந்துகொள்வதாக குறிப்பிடுகின்றனர்.

எனினும், முதலமைச்சருக்கு ஈகோ எனக் கூறுபவர்கள் டெனீஸ்வரனுக்கும் ஈகோ என்று கூறவேண்டும்.

அவர் தன்னை பதவி நீக்கியது தவறு என நீதிமன்றம் சென்று அதன்படி வழக்கில் பதவி நீக்கியது செல்லாது என இடைக்காலத் தடை வாங்கிவிட்டார்.

எனினும், பா. சத்தியலிங்கம் தனக்கு இந்தப் பதவி வேண்டாம் என கௌரவமாகப் பதவி விலகியதைப்போல ஏன் டெனீஸ்வரன் தனது பதவியை இராஜினாமாச் செய்ய முடியாது?

டெனீஸ்வரனும் ஈகோவில் தானே இதனைச் செய்ய மறுக்கிறார்” என எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.