Header Ads



டிஜிட்டல் மயமாகவுள்ள கொழும்பு

கொழும்பு மாந­கர சபையின் புத்தர் சிலையை நான் அகற்­ற­வில்லை. இவ்­வாறு பொய்க் குற்­றச்­சாட்டை பிக்கு ஒருவர் முன்­வைப்­பதை­யிட்டு நான் கவலையடை­கின்றேன் என்று கொழும்பு மாந­கர மேயர் ரோஸி சேனா­நா­யக்க தெரி­வித்தார்.

மூவின மக்­களை நான் சரி சம­மா­கவே வழி­ந­டத்­துவேன். நான் இன, மத பேதங்கள் பார்க்­க­மாட்டேன். நான் மேய­ராக அமர்ந்த நாள் முதல் இது­வரை எனது காரி­யாலயத்தின் கதி­ரை­களைக் கூட மாற்­ற­வில்லை.

கொழும்பு மாந­க­ரத்தை இன்னும் இரு வரு­டங்களுக்குள் டிஜிட்டல் மய­மாக்­குவேன் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

கொழும்பு மாந­கர மக்கள் கட்­டட அனு­மதிப் பத்­தி­ரத்தை பெறு­வ­தற்கு நீண்ட நாட்கள் காத்­தி­ருக்க வேண்­டிய நிலைமை இருந்­தது. இதனால் சாதா­ரண மக்கள் மாத்­தி­ர­மின்றி அமைச்­சர்கள் கூட பெரும் இன்­னல்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர். வரிசை வரி­சை­யாகக் காத்­தி­ருந்து 8 மாதங்கள் வரை காத்­தி­ருக்க வேண்­டிய நிலைமை இருந்­தது. 

ஆனால் தற்­போது அதனை நாம் டிஜிட்டல் மயப்­ப­டுத்­தி­யுள்ளோம். தற்­போது இணைத்த­­ளத்தின் ஊடாக விண்­ணப்பம் செய்து பணத்தை செலுத்தி வெகு விரை­வாக அனு­மதிப் பத்­தி­ரத்தை பெற முடியும். அனு­மதிப் பத்­தி­ரத்தை பெறு­வ­தற்கு மாத்­தி­ரமே கொழும்பு மாந­கர சபைக்கு வர வேண்டும். விண்­ணப்பம் செய்து 14 நாட்­க­ளுக்குள் இடைக்­கி­டையே விண்­ணப்பம் செய்­த­வர்­க­ளுக்கு குறுந்­த­க­வல்கள் மூலம் தமது விண்­ணப்­பத்தின் நிலைமை எந்தக் கட்­டத்தில் உள்­ளது என்­ப­தை குறுந்­த­க­வலின் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.

எனவே தற்­போது நீல பசுமை நக­ர­மா­கவும் டிஜிட்டல் துறையில் மேம்­பட்ட நக­ர­மா­கவும் வர்த்தகத்துறையில் பெரும் முன்­னேற்றம் கண்ட மாந­க­ர­மா­கவும் கொழும்பு நக­ரத்தை மாற்­றி­ய­மைப்போம். அத்­துடன் இன்னும் இரு வரு­டங்களுக்குள் கொழும்பு மாந­க­ரத்தை டிஜிட்டல் நக­ர­மாக மாற்­றி­ய­மைப்போம். மேலும் கொழும்பு மாந­கர சபையின் எனது காரி­யா­லயத்­துக்கு முன்பு இருந்த புத்தர் சிலையை நீக்­கி­ய­தாக ஒமல்பே சோபித தேரர் குற்றம் சுமத்­தி­யி­ருந்தார்.

அது உண்­மைக்குப் புறம்­பான தக­வ­லாகும். நான் ஒரு­போதும் புத்தர் சிலையை நீக்­க­வில்லை. தற்­போதும் புத்தர் சிலை உள்­ளது. இவ்­வாறு பொய்க் குற்­றச்­சாட்டை பிக்கு ஒருவர் முன்­வைப்­ப­தை­யிட்டு நான் கவலை அடை­கின்றேன். மூவின மக்­களை நான் சரி சம­மா­கவே வழி­ந­டத்­துவேன். இன, மத பேதங்கள் நான் பார்க்­க­மாட்டேன். நான் மேய­ராக அமர்ந்த நாள் முதல் இது­வரை எனது காரி­யத்தின் கதி­ரை­களை கூட மாற்­ற­வில்லை. அத்­துடன் முன்னாள் மேயர்­களின் சன்­மா­னங்­களை கூட நான் நீக்­காமல் அப்­ப­டியே வைத்­துள்ளேன். 

பொய் குற்­றச்­சாட்­டு­களை நாம் கண்­டுக்­கொள்­ளாது கொழும்பு நகரை அபி­வி­ருத்தி அடைந்த நக­ர­மாக மாற்ற வேண்டும். துறை­முகர் நகர் திட்டம் பூர்த்­தி­யா­னதும் பாரிய மாற்­றங்­க­ளுக்கு நாம் முகங்­கொ­டுக்க வேண்டி ஏற்­படும். ஆகவே தற்­போது அதற்கு நாம் தயா­ராக வேண்டும். மேலும் கொழும்பு நகரில் டெங்கு நோய் தாக்­கத்தை 45 வீத­மாக குறைத்­துள்ளோம். என்றார்.

கட்­டட அனு­மதிப் பத்­தி­ரத்தை இணை­ய­த்தளங்­களின் ஊடாக துரி­த­க­தியில் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான டிஜிட்டல் திட்­டத்தை ஆரம்­பித்து வைக்கும் நிகழ்வு  நேற்று கொழும்பு மாந­கர சபையின் வெளி அரங்கில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.