Header Ads



புலி­களின் ஆயுதங்கள், முஸ்­லிம்­க­ளிடம் உள்­ளதா..?

விடு­தலை புலி­களின் ஆயுதம் முஸ்­லிம்­க­ளிடம்  உள்­ளதா? என்­பது தொடர்­பாக பூரண விசா­ரணை நடத்­துவோம். நாட்டில் சட்­ட­ விரோ­த­மாக எவ­ருக்கும் ஆயுதம் வைத்­தி­ருக்க முடி­யாது. இது தொடர்­பாக பொலி­ஸா­ரினால் தேடுதல் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக அரச முகா­மைத்­துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்­தும பண்­டார தெரி­வித்தார்.

நிதி மற்றும் ஊடக அமைச்சில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் விடு­தலை புலி­களின் ஆயுதம் தற்­போது முஸ்­லிம்­க­ளிடம் உள்­ள­தாக புனர்­வாழ்வு பெற்ற விடு­தலை புலி அங்­கத்­த­வர்கள் கூறி­யுள்­ளமை தொடர்­பாக  ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் எந்தப் பகு­தி­யிலும் சட்­ட­வி­ரோத ஆயு­தங்­களை வைத்­தி­ருப்­ப­தற்கு நாம் இட­ம­ளிக்க மாட்டோம். அப்­படி ஏதும் இருந்தால் எமக்கு உடன் அறி­வி­யுங்கள். இது தொடர்­பாக பொலிஸார் விரை­வான தேடு­தல்­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். ஆகவே இது தொடர்­பாக அர­சாங்கம் உரிய விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் என்றார்.

2 comments:

  1. கண்டி கலவரத்தில் நடந்த எல்லாவற்றையும் கண்டு பிடித்து தண்டனையும் பெற்று கொடுத்துட்டாரு தலைவரு. இப்ப மொக்க போட இடமில்லாமல் திரியுது.

    ReplyDelete
  2. நீங்க சரியான மந்திரியாக இருந்தால் அந்த புனர்வாழ்வு கொடுக்கப்பட்டதாக கூறப்படும் அந்த விஷகிருமியை பிடித்து விசாரிக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.