Header Ads



கோட்டாபயவுக்கு எதிராக, வழக்குத் தாக்கல்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக, நீதிபதிகள் மூவரடங்கிய விசேட நீதிமன்றில், இன்று (24) வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வீரக்கெட்டிய- மெதமுலன, டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி நிர்மாணப் பணியின் போது, 3 கோடி ரூபாய்க்கு மேலான நிதியை மோசடிசெய்த குற்றச்சாட்டின் பேரில் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, விசேட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் இரண்டாவது வழக்கென்பது குறிப்பிடத்தாக்கது.

No comments

Powered by Blogger.