Header Ads



பொதுபல சேனாவின் அடிச்சுவட்டில், மகிந்த அணியா...?

அரசாங்கத்துக்கு எதிரான ஜனபல ​சேனாவின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று மாலை கொழும்பு லிப்டன் சதுக்கத்துக்கு முன்பாக நடைபெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்சியான பொதுஜன பெரமுண கட்சியின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் ​மேற்கொள்ளப்படவுள்ளது.

அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் மற்றும் விலைவாசி அதிகரிப்பு என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுண கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுபலசேனாவின் பெயரை நினைவுபடுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜனபல சேனா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் பொதுபல ​சேனாவின் அரசியல் கட்சியின் பெயரை ஒரு எழுத்து மாத்திரம் மாற்றி பொதுஜன பெரமுண கட்சியாக மஹிந்த அணியினர் புதிய அரசியல் கட்சியை உருவாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.