Header Ads



நாங்கள் கோழைகளாக இருந்திருந்தால், காத்தான்குடியை புலிகளிடம் இழந்திருப்போம் -ஹிஸ்புல்லாவின் அதிரடிப் பேச்சு

முஸ்லிம்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் ஒழித்து விட்டு அம்மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் வடக்கு கிழக்கு இனப்பிரச்சினைக்கு ஒரு போதும் தீர்வு காண முடியாது என்பதை தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

காத்தான்குடி தேசிய ஷுஹதாக்கள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பள்ளிவாசல்கள் படுகொலை சம்பவதை நினைவு கூறும் 28ஆவது ஷுஹதாங்கள் தின பிரதான நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அவர் அங்கு மேலும் கூறியதாவது:- 

 “ புலிகளால் பள்ளிவாசல்களில் படுகொலை செய்யப்பட்ட ஷுஹதாக்கள் தினத்தை எம்மால் என்றுமே மறக்க முடியாது. இந்த கொடூர சம்பவம் இடம்பெற முன்னர் வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக மாபெரும் அச்சுறுத்தல் இருந்து வருவதை நாங்கள் உணர்ந்தோம். ஆனால், இந்தளவு மோசமான – அகோரமான ஒரு சம்பவம் இடம்பெறும் என்று நாங்கள் நினைக்கவில்லை. எந்தவொரு விடுதலை இயக்கமும் இவ்வாறு படுமோசமான ஒரு செயலை செய்யும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

நான் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடமும் பூர்த்தியாகாத நிலையில் தலைவர் மர்ஹும் அஷ்ரப் சேர் தலைமையில் முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி ஆர்.பிரோமதாஸ, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் சிறிபால ஆர்டிகல உள்ளிட்ட அரசியல் உயர் மட்டத்தில் அடிக்கடி பேச்சு நடத்திக்கொண்டிருந்த போதே இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஒருவாரத்தின் ஏறாவூரிலும் படு மோசமான பள்ளிவாசல் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது. 

இந்த ஷுஹதாக்கள் இரத்தம் சிந்தியதன் விளைவாகவோ எம்மால் முழு கிழக்கு மாகாண முஸ்லிம்களையும் பாதுகாக்க முடிந்தது. விடுதலைப் புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை எவ்வாறு விரட்டியடித்தார்களோ அதே போன்று கிழக்கிலிருந்தும் குறிப்பாக மட்டக்களப்பிலிருந்து முஸ்லிம்களை அடித்து விரட்ட கடும் முயற்சிகளை செய்தனர்.  

விடுதலைப் புலிகளின் அந்த கடுமையான நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு பள்ளிவாசல் படுகொலைச் சம்பவங்கள் பெரும் தாக்கம் செலுத்தியது. சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதால் முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டிய தேவை – உணர்வு அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. 

காத்தான்குடி படுகொலை சம்பவத்தில் ஷுஹதாக்கள் சிந்திய இரத்தம் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு பாதுகாப்பை வழங்கியது. நாங்கள் கேட்டதையெல்லாம் அரசாங்கம் வழங்கியது. இராணுவ முகாம்களை கோரினோம் வழங்கினார்கள், காத்தான்குடியில் பொலிஸ் நிலையம் அமைக்குமாறு கோரினோம் அமைத்தார்கள், ஆயுதம் கோரினோம் வழங்கினார்கள்.

ஷுஹதாக்கள் படுகொலை சம்பவம், அவர்கள் சிந்திய இரத்தம் என்பவற்றால் நாங்கள் மன ரீதியாகவும் பலமடைந்தோம். இங்கிருந்த முஸ்லிம் இளைஞர்கள் இவ்வாறான சூழலில் ஷுஹதாக்களின் சிந்திய இரத்த உணர்விலேயே உருவாக்கப்பட்டார்கள். எம்மை விரட்டியடிக்க முற்படுபவர்களுக்கு பாடம் புகட்டி அவர்களுக்கு முன்பு நாங்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும், எமது பிரதேசத்தை முன்னேற்ற வேண்டும் என்ற உணர்விலேயே நாங்கள் வளர்ந்தோம். இன்று நாங்கள் எமது பிரதேசத்தை கிழக்கு மாகாணத்தில் முக்கிய பிரதேசமாக அபிவிருத்தி செய்துள்ளோம். 

காத்தான்குடி படுகொலைக்கு பின்னர் மிகவும் அச்சுறுத்தலான சூழலில்  எனது இருப்பிடத்தை மட்டக்களப்பு இராணுவ முகாமுக்கு மாற்றிக் கொண்டு அங்கிருந்து முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற சந்தர்ப்பத்தில்,  அச்சுறுத்தல்களுக்கு பயந்து காத்தான்குடியை விட்டு வெளியேற பலர் தயாரானார்கள். அப்போது நாங்கள் யாரையும் ஊரை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. மரணித்தாலும் இந்த மண்ணிலே தான் மரணிக்க வேண்டுமே தவிர யாரும் வெளியேற முடியாது என கூறினோம். எனது இத்தீர்மானம் சமூக ரீதியாக எனக்கு ஏராளமான பிரச்சினைகளை ஏற்படுத்தியது. 

எனினும், நாங்கள் அன்று ஊரை விட்டு போக அனுமதித்திருந்தால் இன்று கத்தான்குடி என்ற மண் இருந்திருக்காது. எவ்வாறு வடக்கில் முஸ்லிம் பிரதேசங்களை நாங்கள் இழந்தோமோ அது போன்று கிழக்கிலும் இழந்திருப்போம். 

அன்று ஆயுத ரீதியான பங்கரவாதத்தை நாங்கள் முகம்கொடுத்தோம். இன்று அரச அதிகாரிகளின் பயங்கரவாதத்துக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது.  முஸ்லிம்களின் பூர்வீக காணிகளில் அவர்களை குடியேற்ற முடியாத அளவுக்கு தடையாக அரச அதிகாரிகள் செயற்படுகின்றனர். இதனை முறியடிப்பது என்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. 

தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதன் ஊடாக வட கிழக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். தமிழ் மக்களும் - முஸ்லிம் மக்களும் ஒற்றுமைப்பட்டு வாழுகின்ற போது மாத்திரமே வடகிழக்குப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும். மாறாக முஸ்லிம்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் ஒழித்து விட்டு அம்மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. இந்த விடயத்தில் தமிழ் தலைமைகள் மிகத்தெளிவாக இருக்க வேண்டும். 

வடகிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதாக இருந்தால் முஸ்லிம்களை தமிழ் மக்கள் கௌரவிக்க வேண்டும். முஸ்லிம்களின் உரிமைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கும், தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கும் தமிழ் தலைமைகள் முன்வர வேண்டும். மாறாக தமிழ் தலைமைகள் தமது அரசியல் சுயலாபங்களுக்காக தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், கோஷங்கள், விமர்சனங்களை முன்வைக்கின்ற போது ஒரு போதும் வடகிழக்குப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. 

தமிழ் - முஸ்லிம் மக்கள் இந்த மண்ணிலே நிம்மதியோடு – அரசியல் தீர்வு பெற்று வாழ வேண்டுமாக இருந்தால் முஸ்லிம்களின் அடிப்படைத் தேவைகள், அரசியல் உரிமைகளை மதிக்கின்ற சமூகமாக தமிழ் சமூகம் மாற வேண்டும். – என்றார். 

7 comments:

  1. இலங்கையில் தமிழர்கள் அடிப்படைவாதிகளாக இருக்கும் வரை தமிழ் முஸ்லிம் ஒற்றுமையென்பது எட்டா கனி தான். அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும் நாம் நாமாக இருப்போம்.நடக்கபோகாத வட கிழக்கு இணைப்பை தமிழர்கள் மறந்து விடுவதே சிறந்தது.

    ReplyDelete
  2. சுவர்க்கம் வாக்களிக்கப்பட்டுள்ள உண்மை  முஸ்லிம்கள் என்றுமே கோழைத்தனத்துக்கும் அநீதிக்கும்  எதிரானவர்களாகவே இருப்பர்!

    ReplyDelete
  3. இலங்கை சோனகர்களே!
    நாம் எப்போதும் வன்முறையை விரும்புபவர்கள் அல்ல,மாறாக வன்முறை எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டால் பார்த்திருக்கும் கோழைகளுமல்ல, நாங்கள் வீரம் பொருந்திய தமிழர்கள் .
    நாங்கள் எக்காலத்திலும் மனிதாபிமானத்துடன் நடக்கவே விரும்பினோம்.
    *பலஸ்தீனத்தில் முஸ்லீம்கள் மீது இஸ்ரேல் காட்டுமிராண்டிதனத்தை கட்டவிழ்த்த போது,
    *சிரியாவில் உங்கள் இனத்தவர்களால் உங்கள் இன பெண்கள்,குழந்தைகள் என வித்தியாசமில்லாமல் கொண்று குவிக்கும் போது,
    முதலில் கண்ணீர் வடித்ததும்,ஆதரவுக்குரல் கொடுத்ததும் நாங்கள் தான் என்பதை நினைவில் வைக்கவும்
    #வரலாற்றை சற்று திரும்பிப்பார்க்கவும்!!
    எங்கள் மீதும்,எங்களின் கிழக்கு மாகாணத்தில் நடந்த அணைத்து படுகொலைகலுக்கும் காரணம் நீங்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை !!!
    கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு ,தமிழரின் காணி பூமி , அபகரிப்பு எல்லாம் சிங்களவரின் பெயரைவைத்து கொண்டு செய்தது நீங்களே !!! பொருளாதார,கலாச்சாரத்தின் மீதும் வன்முறை செய்ய நினைத்தது நீங்கள் தான் அதற்கு வேறு வழியில்லாமல் ஒருசில எதிர்நடவடிக்கை உங்களுக்கு செய்ய வேண்டிய கட்டாயத்தில் செயற்பட்டோம்.
    ஆனால் அதிகாரத்தை பயன்படுத்தி எங்கள் கோயிலை உடைத்து,மயானங்களை சூறையாடி,காமக் கொடூரங்கள் செய்து,எங்கள் அழிவை நினைத்து பாற்சோறு உண்டு மகிழ்ந்தவர்கள் அல்ல நாங்கள்
    எங்களுடன் சேர்ந்து போராடிய சோனக மாவீர்ரகளையும்,தமிழ் மொழிக்காக பாடுபட்ட சோனகர அறிஞர்களையும் இப்பவும் மனதில் வைத்து பூஷிக்கிறோம்.
    தயவுசெய்து இனியாவது உங்கள் வஞ்சகத்தையும்,குரோதத்தையும் கைவிட்டு நேசக்கரம் நீட்டுங்கள் மாறாக வன்முறைதான் தீர்வென நீங்கள் நினைத்தால் எதிர்காலம் இருண்டதாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்....
    எதிரியை நம்பினாலும் துரோகியை நம்பக்கூடாது இருந்தும் கூட உங்களை நம்பினோம் ஏன் என்றால் நீங்களும் எங்கள் மொழியை பேசுவதால் .
    இப்போது நடக்கும் பிரச்சனைக்கும் நீங்கள்தான் காரணம் வேறு யாரும் இல்லை அத்துடன் உங்களின் தொப்பி பிரட்டி புத்தியை மாற்றுங்கள் எதிர்காலத்திலாவது
    இது எங்களின் நன்மைக்காக இல்லை உங்களின் நன்மைக்காகவே மாறவிட்டால் உங்களை காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள் இது எமக்காக இல்லை உங்களுக்காகவே சொல்லுகின்றோம் நினைவில் கொள்ளவும்.

    ReplyDelete
  4. மிஸ்டர் பகுத்தறிவாளன், அறிவ அடகு வைத்து விட்டு கேட்கிறவன் கேனையன்னு பேசக் கூடாது. 90களுக்கு முன்பு வரை சதாம் ஹுசைன் கிராமம் அழிக்கப் படும் வரை காத்தான்குடி பள்ளிவாசல்களில் பொட்டைத்தனமாக கொலை செய்யும் வரை, எங்களின் பொருளாதரத்தை சீரழிக்கும் வரை முஸ்லிம்களால் தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? இவ்வளவும் செய்த பின்னரும் மூடிக்கொண்டிருந்தால் எங்களை நீங்களே கேலி பண்ணி இருப்பீர்கள். அது சரி இயக்கங்களுக்காக போராட வந்த எந்த இஸ்லாமிய இளைஞ்ச்னின் பெயரால் ஒரு தினம் கொண்டாடப்படுகிறது என்று சொல்ல முடியுமா? போராட வந்தவனுக எல்லாம் எங்கே ? உயிரோடு ரத்தம் எல்லாவற்றையும் உறிஞ்சி எடுத்து விட்டு டீசலில் சீனியை கலந்து எரித்து பாசிஸ புலிகள் இன அழிப்பு செய்த வரலாறு எங்களுக்கு தெரியாதா? போராட வந்தவன் எல்லாம் சுவிச்ளும் நோர்வேயிலும் குடியும் கும்மாளமுமாக இருக்க ஒரு இஸ்லாமியன் திரும்ப வரவில்லையே...! உங்கள் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு?

    ReplyDelete
  5. பகுத்து அறிபவரே,
    முஸ்லிம்கள் செய்த அட்டுழியத்தை காலக்கிரம வரிசைப்படி, ஆதாரத்துடன் தரமுடியுமா?
    சாராயம் அருந்துபவர்களுக்குத்தான் காமவெறியும், கொலை வெறியும் அதிகம் என்பது கண்கூடு
    உ.தா: வடக்கில் நடப்பது, முஸ்லிகளாலா?
    இந்நாட்டில் அதிகம் மனிதாபிமான உதவிகள் செய்வது முஸ்லிம்களும், சிங்களவர்களும் மட்டுமே .
    இந்நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டுச்செல்வது தமிழர்களை விட முஸ்லிம்களும், முஸ்லீம் நாடுகளும் தான். உங்களால் அழிவுப்பாதைகள் தான் அதிகம்

    ReplyDelete

Powered by Blogger.