Header Ads



சிறையிலிருந்து வெளியே வரமுடியாதளவு குற்றம்செய்த, வீரவன்சவை ரணிலே காப்பாற்றினார்

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, சிறைக்கு செல்லாது தப்பிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே அவருக்கு உதவியதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

புத்தளம் - ஆனமடுவ, சிரம்பியடி பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சட்டவிரோதமான கடவுச்சீட்டை பயன்படுத்துவது சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய குற்றம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கொண்டு வந்த சட்டத்திற்கு அமைய, அந்த குற்றத்திற்கு பிணை வழங்க முடியாது.

குற்றம் தொடர்பான வழக்கு முடியும் வரை விளக்கமறியலில் இருக்க வேண்டும். எனினும் விமல் வீரவங்சவுக்கு மாத்திரம் அந்த சட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனவும் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.