Header Ads



திருமணத்திற்கு பணம் இல்லாமையால் ATM ஐ உடைத்து, பணம் கொள்ளையிட்டவர் கைது

திருமணத்திற்காக பாரிய கொள்ளையில் ஈடுபட்ட நபர் மூன்று மாதங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பகுதியிலுள்ள வங்கி ஒன்றின் ஏரிஎம் இயந்திரத்தில் பணத்தை கொள்ளையிட்ட போது, இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

எனினும் கடந்த மூன்று மாதங்களாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள், நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர்களை முன்னிலைப்படுத்திய போது 15 லட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் ஒருவரின் திருமண நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு பணம் இல்லாமையினால் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக ஏரிஎம் இயந்திரத்தை உடைத்து 47 லட்சத்து 70 ஆயிரம் ரூபா பணத்தை அவர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள், நீர்கொழும்பு பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.