Header Ads



புலிகளின் ஆயுதங்களுடன் 7 பேர் கைது - கண்டியில் வீடு முற்றுகை, 2 பேர் தப்பியோட்டம்

(JM. Hfeez)

கண்டி புஸ்பதான மாவத்தையிலுள்ள இரு மாடிக்கட்டிடம் ஒன்றில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் எனப் பெயர் குறிப்பிட்ட ஆயுதம் ஒன்றுடன் இன்னும் சில ஆயுதங்களும் சந்தேக நபர்கள் ஏழுபேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.. (22.8.2018)

விசேட பொலீஸ் படைப்பிரிவினர் (எஸ்.டி.எப்) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கிகள் மூன்றும், அதற்கான ரவைகளும், வாள், போலியான வாகன இலக்கத்தகடுகள், மற்றும் கைதிகளுக்குப் போடப்படும் கைவிலங்கு சோடி ஒன்று என்பன கண்டெடுக்கப்பட்டு;ள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர். 

 மேற்படி துப்பாக்கிகளில் 'ரிபிடர் கண்' வகையைச் சேர்ந்த துப்பாக்கி ஒன்றும் பிஸ்டல் வகை கைத்துப்பாக்கி ஒன்றும் ரிவோல்வர் ஒன்றும் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுகிறது. பிஸ்டலில்  'தமிழ் விடுதலைப்புலிகள்' என்று தமிழில்  பெர் பொறிக்கப் பட்டிருந்ததாகவும் பொலீசார் தெரிவிக்கின்றனர். ரிவோல்வருக்குப் பயன் படும் ரவைகள் 25 ம் 'ரிபிடர்' துப்பாக்கிக்கான ரவைகள் 13ம் போலி வாகன இலக்கத் தகடு 6ம் கஞ்சா போதைப் பொருள் மற்றும் கைவிலங்கு என்பனவே கைப்பற்றப்பட்டுள்ளன. 

வீட்டு உடைமையாளர் அரசியல் வாதி ஒருவருடன் தொடர்புள்ளவர் எனச் சந்தேகிக்ககப்படகிறது. சந்தேக நபரும் அவரது மகனும் வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுனள்ளதாகவும் பொலீசார் தெரிவித்தனர். 

அதே நேரம் மேற்படி வீட்டுக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அதி நவீன உயர் வலுக்கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் முற்றுகையின் போது வீட்டிலிருந்து ஏழுபேர் கைமு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆறுபேர் சிங்களவர்கள் என்றும் ஒருவர் தமிழர் என்றும் தெரிய வருகிறது. 

பன்வில, பேராதனை, குருநாகல் முதலான இடங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.  பிரதான சந்தேக நபர் ஏற்கனவே சில குற்றங்களுக்காக தேடப்பட்ட அல்லது சந்தேகிக்கப்பட்ட ஒருவர் எனவும் பொலீசார் தெரிவிக்கின்றனர். விசேட பொலீஸ் பிரிவின் பிரதானி பிரதிப் பொலீஸ் மா அதிபர் எம்.ஆர்.லதீப் மற்றும் மத்திய பிராந்திய பிரதி பொலீஸ் மாஅதிபர் டி.ஆர்.எல். ரனவீர ஆகியோரின் வழிகாட்டலில் மேற்படி முற்றுகை மேற்கொள்ளப்பட்டதாகப் பொலீசார் தெரிவித்ததனர். 

பாரியதொரு சம்பவத்தை மேற்கொள்வதற்கு இவர்கள் இவ்வாறு மேற்படி வீட்டில் தங்கி இருக்கவாம் என்ற கோணத்தில் விசாரணைகள் நடை பெறுவதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதம் எவ்வாறு கிடைத்துள்ளது என்பது பற்றியும் பொலீசார் விசாரணைகளை முன் எடுத்துள்ளனர். 

10 comments:

  1. இந்த நாடகத்துக்கு யாரு இயங்குனர் வசன கர்த்தா எனவும் போடுங்கள். முஸ்லிம்களுக்கு எதிராக மிக பெரிய சூழ்ச்சி நடை பெற காத்திருக்கின்றது.

    ReplyDelete
  2. யாராவது ஒரு முஸ்லிம் வீட்டில் இவையெல்லாம் வைத்து விட்டு முஸ்லிம்களிடம் ஆயுதம் உள்ளது என்று குற்றம் சாட்டவே இவர்களின் திட்டமாக இருக்கும் .சிங்களவனை நம்பினாலும் நன்றி கெட்ட தமிழனை ஒருபோதும் நம்பவே வேண்டாம் .

    ReplyDelete
  3. சட்டம் ஒழுங்கு அமைச்சரின் கேள்விக்கு சட்டெனப் பதில்!

    ReplyDelete
  4. வேட்டை ஆரம்பம் .....

    ReplyDelete
  5. ரொம்ப கஷ்டப்பட்டு செட்டப் செய்து மாட்டிக் கொண்டார்களோ....

    ReplyDelete
  6. அவர்தான் கொடுத்திருப்பார்.(புனர்வாழ்வளிக்கப்பட்டவர்)

    ReplyDelete
  7. @Rizwan Junaideen:நன்றியை பற்றி பேச உங்களுக்கெல்லாம் எந்த அருகதையும் கிடையாது. தவிர முஸ்லிம்களும் தமிழர்களும் ஒருபோதும் ஒருவரை ஒருவர் எப்போதுமே நம்புவது இல்லை. வரலாறு முழுக்க சிங்களவர்களுடன் கைகோர்த்து தமிழர்களுக்கு எதிராக என்ன என்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்து வந்தீர்கள். இதில் ஒருத்தர் செய்தியை முழுவதுமாக படிக்காமல் "வேட்டை ஆரம்பம் " என உற்சாக கூச்சல் வேறு போடுகிறார்.

    ReplyDelete
  8. alhamdullia idu oru muslim erunda podum ada udi udi udi peresaga erupparka

    ReplyDelete
  9. This clearly shows the connection between two terrorist group of BBS and Tamil Diaspora who are aiming Muslims and their property.Recent statement of former Tamil terrorist and BBS don prasad's complain about the Weapon in Muslim politicians shows their conspiracy against Muslims

    Kandy riots too the plan of this two terrorist group,which one month before Kandy riots Tamil diaspora shed crocodile tears telling Muslims are not safe in Srilanka and could come attack any time.How they know in advance this? This shows their connection and their involvement.

    This is the result of Bloody greedy moulavies who make to fast on eid days go after politicians as a stooge and do what politicians says without considering the consequences.Because of these moulavies not only Srilankan Muslims but entire Muslim world is under attack.This is result of UNO visit of these stooge.Well done ACJU.

    ReplyDelete
  10. சிங்களவர்களின் எச்சை எலும்பு துண்டுகளை பொருக்கி தின்னும் சில தமிழ் பயங்கரவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் காரியங்களில் இதுவும் ஒன்று

    ReplyDelete

Powered by Blogger.