Header Ads



3 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த, இலங்கை பிக்குவுக்கு ஸ்கொட்லாந்தில் தண்டனை

ஸ்கொட்லாந்தில் 3 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கை பௌத்த பிக்குவுக்கு அந்த நாட்டு நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்து, க்லாஸ்கோவில் உள்ள மனநிலை மையத்தில் 3 பெண்களிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாக பௌத்த பிக்கு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ரேவத்த கம்புருவெல என்ற 47 வயதான பிக்கு மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டது.

2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு இடையே மூன்று பெண்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை அல்லது தவறான முறையில் நடந்து கொண்டமை உட்பட 3 குற்றச்சாட்டுகளின் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு நாள் தான் குறித்த பிக்குவுடன் யோகா அறையில் தனியாக இருந்த போது அவர் தன்னை அச்சுறுத்தியதாகவும், தன்னிடம் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டதாகவும், இந்த வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் யோகா பாடத்தின் போது அவர் தவறாக நடந்து கொண்ட முறையினை குறித்த பெண் நீதிமன்றத்தில் விபரித்துள்ளார்.

அதேபோல் மேலும் இரண்டு பெண்களிடம் அவர் தவறாக நடத்து கொண்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய அவருக்கு 200 மணித்தியாலங்கள் சம்பளம் இல்லாத வேலை வழங்க க்லாஸ்கோ, Sheriff நீதிமன்றம் முன்தினம் உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளியான தேரரை மக்களுடன் பணியாற்ற முடியாத பட்டியலில் இணைக்க வேண்டுமா என்பது குறித்து ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3 comments:

  1. ஐயோ பிக்குகள் ஜெயிலுக்கு போகலாமா? காவியின் மரியாதை இல்லாமல் போய்விடும். இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்... உடனடியாக Scotland அரசு இந்த காம கயவனக்கு பொது மன்னிப்பு வழங்கி அவனுக்கு ராஜ மரியாதை வழங்கி கௌரவிக்க வேண்டும்... இல்லாமல் போனால் ஐ.நா வில் முறைப்பாடு செய்வோம்.

    ReplyDelete
  2. மனித கரங்கள் மதத்தில் கையடிக்கும் போது வருகின்ற விளைவுகள்.அறுவடை செய்ய வேண்டியது தான்.

    ReplyDelete
  3. My3 yum Manthirigalum Manthira aalosanai.... Ithil mahinda aniyum sernthu irahasiya pechu nadatta aalosanai...!!!
    HiHiHiHihi

    ReplyDelete

Powered by Blogger.