Header Ads



நீரில் மூழ்கி 2 அரபுக் கல்லூரி மாணவர்கள் வபாத் - வாழைச்சேனையில் துயரம்

(அபூ நமா)  

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்தியாய குளமொன்றில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி மரணித்துள்ளதோடு ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ஏறாவூர் பாக்கியதுஸ் சாலிகாத் அரபுக் கல்லூரியில் கல்வி கற்கும் எட்டு மாணவர்கள் ஜெயந்தியாயவிலுள்ள குளமொன்றில் இன்று (29) நீராடிக்கொண்டிருக்கும் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் ஏறாவூர் மீரான் கேணி சக்காத் கிராமத்தில் வசிக்கும் முகம்மது அனஸ் முகம்மது சாக்கிர் (வயது 24), ஏறாவூர் ஆர்.டீ.எஸ்.வீதி மிச் நகரைச் சேர்ந்த முகம்மது உசனார் முகம்மட் சாதிக் (வயது 21) ஆகிய மாணவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள்.

இவர்களோடு நீராடிய வீ.ரீ.இஸ்சத் (வயது 23) எனும் மாணவர் ஆபத்தான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
மரணமடைந்த இருவரின் உடல்களும் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.