Header Ads



ஞானசார மேன்முறையீடு செய்ய 29 ஆம் திகதிவரை கால அவகாசம்

பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

மேன்முறையீட்டை மேற்கொள்ள இம்மாதம் 29ம் திகதி வரை ஞானசார தேரரின் சட்டத்தரணிகளுக்கு நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள நான்கு குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.