Header Ads



ஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி


நீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் இன்று -08.08.2018- தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி அவருக்கு கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்ன ஆகியோரால் இந்த தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. .

அப்போது ஹோமாகம நீதவானாக இருந்த ரங்க திஸாநாயக்கவால் இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

அதன்படி அந்த வழக்கு விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


5 comments:

  1. சூடுகண்ட பூனை போல இனி இந்தநாட்டின் பிரதான அரசியல் வாதிகள் முதல் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து மகோடிஸ்மார்களும் அங்குமிங்கும் ஓடத் தொடங்குவார்கள். இந்த குற்றவாளியைக் காப்பாற்றினால் நாட்டின் எல்லாப் பிரச்னைகளும் சூரியனைக்கண்ட பனி போல் மறைந்துவிடும் என்ற தீர்மானத்தில் குற்றவாளியைக் காப்பாற்ற முயற்சிகள் நடக்கும். இது தான் இந்தநாட்டின் வீணாப்போன அரசியல்.

    ReplyDelete
  2. Magilchi... (If he really kept behind the bars for the complete sentence period)

    ReplyDelete
  3. A good lesson for everyone who violates the law.

    ReplyDelete
  4. Do not be excited...., He will come out within a couple of days by this Joker's Govt.......

    ReplyDelete
  5. The funny thing is, for his offense and the sentence received, all the politicians will blame the government and rally around this monk to use it for their political gain. What a country!! No wonder if he is released with Presidential Pardon before 29th!

    ReplyDelete

Powered by Blogger.