Header Ads



அரச வாகனத்தை முறைக்கேடாக பயன்படுத்திய SLFP அமைப்பாளருக்கு 12 வருட சிறை - 105 இலட்சம் அபராதம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வலப்பனை அமைப்பாளரான, வலப்பனை பிரதேச ​சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமரஹேவவுக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு, அரச வாகனத்தை முறைக்கேடாக பயன்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அவருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா மேல் நீதிமன்றத்தினால், இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அத்தண்டனைக்கு மேலதிகமாக, 105 இலட்சம் ரூபாய் தண்டம் செலுத்துமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.