Header Ads



விஜயகலாவுக்கு சுகமில்லை - வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றார்

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழில் தனது இல்லத்தில் தங்கியுள்ள அவருக்கு இன்று திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்ட அவர் மீண்டும் வீடு திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற அரச நிகழ்வு ஒன்றில் பேசிய அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், “நாம் உயிருடன் இருப்பதற்கும், வீதியில் சுதந்திரமாக நடப்பதற்கும், விடுதலை புலிகளின் மீள் எழுச்சி அவசியம்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில், அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு பிரதமர், ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்துள்ளார்.

மேலும் அவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

3 comments:

  1. இந்த பயம் இருக்கட்டும். புலி பூச்சாண்டி காட்டும் வாய் சொல் வீரர்கள் இனிமேல் அடங்கியிருங்கள்

    ReplyDelete
  2. என்னம்மா நீங்க விடுதலை புலிகளின் பெயரை உச்சரித்ததட்கே களைத்து போய் விடீர்கள்.

    ReplyDelete
  3. @Gtx, அப்போ ISIS பூஞ்சாண்டி வீரர்கள் என்ன செய்வதாம்?

    ReplyDelete

Powered by Blogger.