இஸ்ரேலின் ஆளில்லா விமானத்தை, கல்லெறிந்து வீழ்த்திய பலஸ்தீனர்கள்
இஸ்ரேலியப் படையினரால் இரு பலஸ்தீன இளைஞர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து தமது வாழிடங்களுக்கு மீளத் திரும்புவதற்கான வாராந்த ஊர்வலத்தில் பலஸ்தீனர்களால் இஸ்ரேலின் கண்காணிப்பு ஆளில்லா விமானமொன்று வீழ்த்தப்பட்டது.
சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள இஸ்ரேல் இராணுவம் தகவல்கள் கசிவதற்கான எந்த ஆபத்தும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
கல்லெறியும் சாதனைத்தைப் பயன்படுத்தியே ஆளில்லா விமானம் அடித்து வீழ்த்தப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்கு கண்ணீர் புகையினை விசுறுவதற்கு இஸ்ரேலிய படையினர் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
காஸா பள்ளத்தாக்கில் இஸ்ரேல் படையினர் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி அடிக்கடி முற்றுகைக்குள்ளாகியுள்ள பிரதேசங்களில் பலஸ்தீன இராணுவ கட்டமைப்புக்களை கண்காணித்தல் மற்றும் புகைப்படம் எடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் அல்லது ஏலவே திட்டமிடப்பட்ட நிலையான இலக்குகள் மீது வான் தாக்குதல்களை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli
Post a Comment