Header Ads



ஹஜ் யாத்திரையை குழப்ப சதி, சட்ட நடவடிக்கை எடுப்போம் என்கிறார் ஹலீம்

ஹஜ் யாத்திரிகையினை குழப்புவதற்கு ஒரு சிலர் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தபால் சேவை மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் சபையில் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

ஹஜ் யாத்திரிகைக்கான முகவர் பதிவின்போது மோசடிகள் இடம்பெற்றதாக ஒரு சில முகவர் அமைப்பு குற்றம் சுமத்தி வருகின்றனர். எனினும் ஹஜ் யாத்திரிகைக்கான முகவர் பதிவு விடயத்தில் எந்தவொரு மோசடியும் நடக்கவில்லை. ஹஜ் யாத்திரிகையினை குழப்புவதற்கு ஒரு சிலர் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments

Powered by Blogger.