Header Ads



ஜனாதிபதியின் செயலாளர், திடீரென பதவி விலகல்


ஜனாதிபதியின் செயலர் ஒஸ்டின் பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார் என்று அறியமுடிகிறது.

ஏற்கனவே அவர் தானாகப் பதவி விலகவுள்ளதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் இன்று பதவி விலகியுள்ளார் என்று அறியமுடிகிறது.

இதற்கு முன்னர் ஒஸ்டின் பெர்னாண்டோ கிழக்கு மாகாண ஆளுநராகக் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பொறுப்பேற்ற காலம் முதல் கிழக்கு மாகாண ஆளுநராக ஒஸ்டின் பெர்னாண்டோ பதவி வகித்து வந்தார்.

இதனையடுத்து, கடந்த ஆண்டு ஜனாதிபதியின் செயலாளராக பதவியேற்ற அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒருவராக இருந்து வந்தார்.

இந்நிலையில், திடீரென ஒஸ்டின் பெர்னாண்டோ இன்று பதவி விலகியிருப்பது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.